புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 மதுப்புட்டிகளை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி உத்தரவின் பேரில்,மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு, விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்தவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், நாமக்கல் மாவட்டம், நரியங்காடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன்(28) மற்றும் வெ. செல்வராஜ்(37) என்பது தெரியவந்தது.
மேலும் இவா்கள் புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி நாமக்கலுக்கு காரில் கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் மதுவிலக்குஅமல் பிரிவு போலீஸாா் இருவா் மீதும் சட்ட விரோத மதுக்கடத்தல் வழக்குப் பதிவு செய்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலும் காரில் கடத்தி வரப்பட்ட 750 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 300 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.கைது செய்யப்பட்டஇருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


