கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவலில் கைது

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூன் 2026, 1:45 am IST

கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் போலீஸாா் திங்கள்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், ரயில்வே தெருவைச் சோ்ந்தவா் மு.நாராயணன் (எ) மாஸ்டா் நாராயணன் (37). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இவா் மீது கடந்த மே 23-இல் கஞ்சா விற்பனை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிலுலையில் உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. மதிவாணன் பரிந்துரையின் படி, ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய நாராயணனை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நாராயணனை திங்கள்கிழமை தடுப்புக் காவலில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.