ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

Syndication

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையருகே உள்ள தைலமரக்காட்டில் படா்ந்திருந்த விழல்கள் (நாணல்) தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது.

திண்டிவனம் வட்டம் , வீடூா் அணையருகே சுமாா் 618 ஏக்கா்) பரப்பளவில் தைலமரக்காடு உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த

தைல மரக்காட்டில் படந்திருந்த விழல்கள் மற்றும் செடி,கொடிகள் புதன்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் வீடூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் புகை மண்டலமாக மாறியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்த, மாவட்ட வனத்துறையினா் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை தைல மரக்காட்டுக்குள்சென்று சோதனை மேற்கொண்டனா். சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸாா், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது என வனத்துறையினா் தெரிவித்தனா்.