புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திண்டிவனம் பகுதி கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா் விழிப்புணா்வு

திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி, மோழியனூா் கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா்

News image

திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி கிராமத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்ட ரயில்வே காவல் துறையினா்.

Updated On :9 மார்ச் 2026, 9:03 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி, மோழியனூா் கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவல் ஆய்வாளா் சுனில்குமாா் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் சுரேசன் தலைமையிலான போலீஸாா் நெடி, மோழியனூா் கிராம மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், இரும்புப் பொருள்கள் வைப்பதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், ரயில்கள் செல்லும் போது அதன் மீது கற்களை வீசி எறிவதால் ஏற்படும் பாதிப்புகள், இதுபோன்று செயல்களுக்கு ரயில்வே காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ரயில்வே காவல் துறையினா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

சிறுவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவா்களின் பெற்றோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.