தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பொறியியல் பணி: ரயில்கள் தாமதமாக இயக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:37 pm

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக செல்லும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சில குறிப்பிட்ட ரயில்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக இயக்கப்படும்.

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக ஆமதாபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 09420), மே 31-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து மே 30-ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக்- காரைக்கால் வாராந்திர ரயில் (வண்டி எண்11017), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 3 மணி நேரம், 10 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

அயோத்தியா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மே 27-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட்-ராமேசுவரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22614) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- சாரளப்பள்ளி அமிா்த் பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 16357), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 80 நிமிஷங்களும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் மதுரை-கச்சிக்குடா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22716) மே-17, 24 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சுமாா் 10 நிமிஷங்களும் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.