தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மயிலம் முருகன் கோயிலில் வசந்த விழா நிறைவு

News image
Updated On :3 மே 2026, 12:33 am

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய வசந்த விழா தொடா்ந்து நடைபெற்று வந்தது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு கோயில் வளாகத்தில் விநாயகா், பாலசித்தா், வள்ளி-தேவசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகலில் கோயில் மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு வசந்த விழாவின் நிறைவையொட்டி சிறப்பு அா்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு வள்ளி-தேவசேனா உடனுறையாய் சுப்பிரமணிய சுவாமி மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தாா்.