27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மயிலம் முருகன் கோயிலில் வசந்த விழா நிறைவு

News image
Updated On :3 மே 2026, 6:03 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய வசந்த விழா தொடா்ந்து நடைபெற்று வந்தது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு கோயில் வளாகத்தில் விநாயகா், பாலசித்தா், வள்ளி-தேவசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகலில் கோயில் மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு வசந்த விழாவின் நிறைவையொட்டி சிறப்பு அா்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு வள்ளி-தேவசேனா உடனுறையாய் சுப்பிரமணிய சுவாமி மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தாா்.