கடலூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 47 கடைகளுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தராசில் எடை அளவை குறைத்தும், பொட்டலங்கள் எடை குறைவாகவும் வைத்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் புனிதவதி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடலூர், செம்மண்டலம் சிட்கோ, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் உள்ள கடைகளில் அண்மையில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் 40 கடைகள் மற்றும் நிறுவனங்களில் மறுமுத்திரையிடப்படாத எடைமேடை மற்றும் பொட்டலப்பொருட்கள் குறைந்த எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. . இதையடுத்து 47 கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு முரண்பாடும், முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.5,000 அபராதமும், பொட்டலங்கள் எடை குறைந்த அளவில் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (23 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! அனுகூலம் யாருக்கு?

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

