429 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர்
கடலூரை அடுத்த நாணமேடு கிராமத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை 429 பயனாளிகளுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை வழங்கினார்.









