ரயில்வே சுரங்கப் பாதை: மே மாதத்துக்குள் முடிவடையும்
கடலூர் திருப்பாப்புலியூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணி இந்தஆண்டு மே மாதத்துக்குள் முடித்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அப்பணியை மேற்கொண்டு வரும் மாலதி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் கூறினார்.









