தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 15-ல் ஜமாபந்தி

சிதம்பரம் வட்டத்தில் 1422 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற மே 15-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிற

Updated On :13 மே 2013, 12:27 am IST

சிதம்பரம் வட்டத்தில் 1422 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற மே 15-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வருவாய் தீர்வாயத்தில் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பங்கேற்று மனுக்களைப் பெறுகிறார்.

இது குறித்து சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா தெரிவித்தது: மனு அளிக்க விரும்பும் கிராம மக்கள் தங்களது குறைகளை குறிப்பிட்டு, மனுவின் நகலை வருவாய் தீர்வாயம் நடத்தப்படும் நாட்களுக்கு முன்பாகவே உதவிஆட்சியர் அல்லது சிதம்பரம் வருவாய் வட்டாட்சியருக்கோ மனுக்களை அனுப்பலாம்.

மேற்படி மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு வருவாய் தீர்வாய நாள்களில்  உரிய உத்தரவுப் பிறப்பிக்கப்படும்.

அப்படி அனுப்பப்படும் மனுக்களின் தலைப்பில் வருவாய் தீர்வாயத்துக்கான மனு என்ற விவரத்தை தவறாமல் எழுத வேண்டும். இல்லையென்றால் அந்த மனு வருவாய் தீர்வாயத்துக்காக கொடுக்கப்படும் மனுவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

1422 பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் கிராமங்கள் விவரம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என வட்டாட்சியர் எம்.விஜயா

தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.