தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கக் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:53 am

DIN

கடலூரில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கக் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சுகாதாரத்   துணை  மையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற விகிதத்தில் பணியிடங்களை உருவாக்கி, பணி நியமனம் செய்ய வேண்டும். பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அதற்கான பணிகளை மட்டுமே வழங்க வேண்டும். டெங்கு ஒழிப்புக் களப்பணியில் உள்ள பிரச்னைகளை முறைப்படுத்த வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்களின் களப்பணி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் எதிரே புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் டி.நாட்டுத்துரை தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் செல்வநாதன், பரிமளம், அருண்குமார், துளசிதாஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மனோகரன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட முன்னாள் செயலர் என்.காசிநாதன், உணவுப் பாதுகாப்புத் துறை சங்கத்தின் மாநிலப் பொருளாளர் டி.ரவிச்சந்திரன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டச் செயலர் ஆசைத்தம்பி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தணிக்கையாளர் எல்.அரிகிருஷ்ணன் நிறைவுறையாற்றினார். கூட்டமைப்பின் பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.