மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட மேலப்புதுப்பேட்டை கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டது.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட மேலப்புதுப்பேட்டை கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டது.
 முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, வருவாய்த் துறை சார்பில், 12 பேருக்கு இறப்பு நிவாரணத் தொகையாக ரூ. 12.30 லட்சமும், 11 பேருக்கு வேளாண், தோட்டக்கலைத் துறை சார்பில், ரூ. 59 ஆயிரம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களையும், மேலும், 6 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 18 பேருக்கு பட்டா மாற்றம், 15 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ. 12.89 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
 குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com