அன்னப்பூரணிக்கு லட்டுத் தேர் அலங்காரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.
 சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜராஜ பெருமானுக்கு, காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு பால் நிவேத்யத்துடன் பூஜை தொடங்கியது.
 பின்னர் தீபாவளி சிறப்பு அபிஷேகம், நிவேத்யம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு மடப்பள்ளியில் உள்ள அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
 பின்னர் பொது தீட்சிதர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அன்று மாலை வாணவேடிக்கையுடன் அன்னபூரணி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com