வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம் தொடர்பாக, உச்ச நீதின்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூரில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்தச் சட்டத்தை எதிர்த்து, மும்பையைச் சேர்ந்தவர் தொடுத்த வழக்கில், வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அதே பழைய வடிவிலேயே மீண்டும் அமல்படுத்தக் கோரியும் கடலூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலவரங்களைத் தடுக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்கள் இல.திருமேனி, சிவகுருநாதன், ஜோதிலிங்கம், கோவிந்தன், சதீஷ்குமார், மு.சரிதா, சபரி, பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
வழக்குரைஞர்கள் பி.புருஷோத்தமன், க.வெற்றிகொண்டான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








