கடலூரில் மகளிர் காங்கிரஸார் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டார். அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஆளும் கட்சிப் பிரமுகர் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
இந்தச் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூரில் மகிளா காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
மாநிலச் செயலர் மங்கலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் அமுதா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.கலையரசன், தொழில்சங்கச் செயலர் டி.ராம்ராஜ், மீனவரணிச் செயலர் கார்த்தி, வட்டத் தலைவர் ராஜாராமன், நகரச் செயலர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


