பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

எரிவாயு உருளைகள் வெடித்ததில் 6 பேர் காயம்

பெண்ணாடத்தில் 2 எரிவாயு உருளைகள் வெடித்ததில் 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பெண்ணாடத்தில் 2 எரிவாயு உருளைகள் வெடித்ததில் 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
பெண்ணாடம் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் பெ.ரவி (50). சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். கடையின் மற்றொரு பகுதியில் இவரது வீடு உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை ரவியும், அவரது மனைவி சரோஜாவும் (49) வழக்கம்போல கடைக்குச் சென்றனர். பின்னர் தங்களது வீட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் கடையில் தீப்பிடித்து புகை வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியினர் ரவிக்கு தகவல் அளித்துவிட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
அப்போது, திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த 2 எரிவாயு உருளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. இதில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகன் அசோக்குமார் (27), கலியபெருமாள் மகன் பரமசிவம் (25), நடராஜன் மகன் பழனிவேல் (27), ராமலிங்கம் மகன் சிவபாலன் (35), காதர் பாஷா மகன் சம்சுதீன் (40) மற்றும் ரவி (50) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக 6 பேரையும் அந்தப் பகுதியினர் மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கடையின் மற்றொரு பகுதியில் வசித்து வரும் ரவி தம்பதியர் சுடுதண்ணீர் போடுவதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்தனர். 
பின்னர் அதை மறந்து விட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்றுவிட்டனராம். அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.