தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர கோரிக்கை

நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது. 

Updated On :23 ஜூலை 2018, 9:20 am IST

நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது. 
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மாவட்டத் தலைநகரான கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலைய பகுதியில் சுமார் 10 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல, முன்னாள் படை
வீரர் மாளிகை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்புகள் அமைத்து சுமார் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களது நிலையை மேம்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையிலும் கடலூர் மாவட்டத்தில் இவர்களின் நிலை மோசமாகவே உள்ளது. எனவே, இவர்களின் நிலையை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் உரிய 
நடவடிக்கை எடுத்து நிரந்தர குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.