நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மாவட்டத் தலைநகரான கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலைய பகுதியில் சுமார் 10 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல, முன்னாள் படை
வீரர் மாளிகை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்புகள் அமைத்து சுமார் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களது நிலையை மேம்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையிலும் கடலூர் மாவட்டத்தில் இவர்களின் நிலை மோசமாகவே உள்ளது. எனவே, இவர்களின் நிலையை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் உரிய
நடவடிக்கை எடுத்து நிரந்தர குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








