சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:21 am IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட நிர்வாகி டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட நிர்வாகி டி.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடிகை 
ஸ்ரீபிரியா, காவல் துறை முன்னாள் உயரதிகாரி ஏ.ஜி.மெளரியா, சவுரிராஜன், சி.கே.குமரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேசியதாவது: மக்களிடம் மறதி என்ற நோய் இருப்பதால் பழைய தவறுகளை மறந்து மீண்டும், மீண்டும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். எனவே, அனைவரும் அரசியல் அறிவு பெற வேண்டும். வாக்களிக்கும் முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார். 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருகிறது. ஆட்சி சரியாக இருந்தால் இது போன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. சிறுமிகள் வன்கொடுமை போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆணும், பெண்ணும் சரிசமம் என சிறுவயது முதலே குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி அவர்களை வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மேற்கு மாவட்ட நிர்வாகி கே.ரபீக் வரவேற்றார். கிழக்கு மாவட்ட நிர்வாகி எஸ்.சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.