வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியவருக்கு தங்கப் பதக்கம்

கடலூரில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 3:06 am

DIN

கடலூரில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.
கடலூர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் திரைப்படக் கருவி இயக்குபவராகப் பணிபுரிபவர் ந.முருகன். இவர் ஊர்தி ஓட்டுநர் பணியில் 1987-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில், எந்தவித விபத்தின்றி வாகனத்தை ஓட்டியதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக 4 கிராம் கொண்ட தங்கப் பதக்கமும் மேலும், 25 ஆண்டுகாலம் அப்பழுக்கற்ற முறையில் பணியை நிறைவு செய்தமைக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரமும் அரசால் வழங்கப்பட்டது. இந்த வெகுமதிகளை கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார் (படம்).
நிகழ்ச்சியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலக கணக்கர் ல.ஆனந்தகிருஷ்ணன், தட்டச்சர் சே.சிவகுரு, தொழில்நுட்ப உதவியாளர் து.பாலாஜி, மின் உதவியாளர் ந.ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.