ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை: என்எல்சி நிதி வழங்கக் கோரிக்கை 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைய என்எல்சி இந்தியா நிறுவனம் நிதி வழங்க வேண்டுமென நெய்வேலி மக்கள் நல மன்றம் மற்றும் தமிழர் சமூக அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:04 am

தினமணி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைய என்எல்சி இந்தியா நிறுவனம் நிதி வழங்க வேண்டுமென நெய்வேலி மக்கள் நல மன்றம் மற்றும் தமிழர் சமூக அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்தனர்.
 இந்த அமைப்புகள் சார்பில் சார்பில், 19-ஆவது உலக தாய்மொழி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
 இதையடுத்து, அமைப்பின் தலைவர் மு.பெரியார் பேரன், உறுப்பினர்கள் லட்சுமணன், அசோக்குமார், அண்ணாமலை, சந்திரசேகரன் ஆகியோர் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமனை சந்தித்தனர். அப்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைய செலுத்த வேண்டிய கட்டணத்துக்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளும் நிதி வழங்கி வருகின்றன. இதேபோல, என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக பெருந் தொகையை தமிழ் மொழிக்காக வழங்க வேண்டுமென அந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.