மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கலப்பு திருமணம் புரிந்தோர் அரசு உதவித் தொகைக்குவிண்ணப்பிக்கலாம்

கலப்புத் திருமணம் செய்தவர்கள் அரசின் உதவித் தொகை கோரி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.

News image
Updated On :14 மே 2018, 10:50 pm

DIN

கலப்புத் திருமணம் செய்தவர்கள் அரசின் உதவித் தொகை கோரி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம், அம்பேத்கர் நிறுவனத்தின் மூலம் சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த கலப்புத் திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளும் இதர வகுப்பினருக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.2.50 லட்சம் நிதி உதவி வழங்கி மாநில அரசின் மூலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மனுதாரர் மனுவுடன் கல்விச் சான்று, மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும், திருமண அழைப்பிதழ், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கலப்பு திருமணச் சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கலப்பு திருமணச் சான்று, அரசு பதிவு பெற்ற வழக்குரைஞரிடம் ரூ.10-க்கான ஆணை பத்திரம் அசல், முதல் திருமணச் சான்று, திருமண பதிவுச் சான்று, மனுதாரர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், மக்களவை அல்லது சட்டப் பேரவை உறுப்பினர் பரிந்துரைக் கடிதம், வங்கியில் இருவரும் சேர்ந்து தொடங்கப்பட்ட கூட்டு வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
சட்டப்படியான திருமண வயது உடையவர்கள், கலப்பு திருமணமான ஒரு ஆண்டுக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.