தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ரோட்டரி சங்கக் கூட்டம்

பண்ருட்டி ரோட்டரி சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கக் கட்டட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 11:04 pm

பண்ருட்டி ரோட்டரி சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கக் கட்டட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் கோ.காமராஜ் தலைமை வகித்துப் பேசினார். பொருளாளர் என்.டி.ரவிசேகர், துணை ஆளுநர் மதன்சந்த், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கண் தானம் வழங்கிய மூன்று குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தோட்டக்கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி ஆட்சியரிடம் விருது பெற்ற என்.டி.ரவிசேகர், சென்னையில் நடைபெற்ற வர்த்தகர் சங்க மாநாட்டில் வ.உ.சி. வணிகச் செம்மல் விருது பெற்ற தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் ஆகியோரை பாராட்டி கெளரவித்தனர்.
நிகழ்வில், ரோட்டரி சங்க இணைச் செயலர் கெளரிசங்கர், அமிர்தராஜ், வீரப்பன், எஸ்.மோகன்குமார், சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.