வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் ராஜேஷ்குமார், மோகனசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓபிஆர் கல்லூரி முதல்வர் கவிதா தேவி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜயா பங்கேற்று, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார்.
பின்னர், அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கினார். ஆசிரியர் நவமணி மேற்பார்வையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உயர் கல்வி நிலைய மாணவிகள், அப்பர் ஏழை மாணவிகள் இல்ல மாணவிகள், ஓபிஆர் கல்வி நிறுவன மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி மத்தாப்புக் கொளுத்தி கொண்டாடினர். ஓபிஆர் செவிலியர் கல்லூரி முதல்வர் சுதந்திராதேவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








