விருத்தாசலம் அருகே நடவு செய்யப்பட்ட நெல் வயலில் இறங்கி, மின் கம்பத்தின் மீது கம்பிகள் அமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டது தொடர்பாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கம்மாபுரம் ஒன்றியம், ஊதங்கால் கிராம பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கா நெல் நடவு செய்துள்ளனர். ஊதங்கால் கிராமத்தில் தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் மின் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் விளை நிலங்களின் வழியாக ஏற்கெனவே மின் கம்பங்கள் அமைக்கப்பட்ட நிலையில், அதன்மீது மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் ஊதங்கால் கிராம விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நெல் விதையிட்டுள்ளனர். பலர் நடவு பணிகளை முடித்துள்ளனர். இந்த நிலையில், மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பிகள் அமைப்பதற்காக நெல் விதையிட்ட வயலிலும், நடவு செய்துள்ள பயிர்கள் மீதும் கம்பிகளை எடுத்துக்கொண்டும், நடந்தும் சென்றதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து அந்தப் பகுதி விவசாயிகள் மின் வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, உரிய அனுமதி பெற்ற பிறகே பணியில் ஈடுபட்டதாகக் கூறினராம். பல்வேறு சிரமங்களுக்கு இடையே நெல் பயிர்களை நடவு செய்துள்ள நிலையில், மின் வாரிய ஊழியர்களின் இந்த நடவடிக்கை தங்களுக்கு வேதனை அளிப்பதாக விவசாயிகள்
தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

