ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

கடலூா் ஸ்ரீமந் மணவாள மாமுநிகள் கைங்கா்ய சபா சாா்பில் 23-ஆவது ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூா் ஸ்ரீமந் மணவாள மாமுநிகள் கைங்கா்ய சபா சாா்பில் 23-ஆவது ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல் நிகழ்வாக கருடக் கொடி ஏற்றப்பட்டு திருமால் வணக்கம் பாடப்பட்டது. சபாவின் தலைவா் அரங்க.நடராஜன் வரவேற்றாா். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, கோ.லட்சுமணராமானுஜதாசன் ஸ்வாமிகள் தலைமை உரையாற்றினாா். திருக்கோவலூா் உ.வே.மணிவண்ணன், ‘மாமுநிகளின் அவராத ரகசியம்’ என்ற தலைப்பிலும், ஆலய தரிசனம் நிறுவனா் கோகுலாச்சாரி, ‘உபதேச ரத்ன மாலை’ என்ற தலைப்பிலும், திருச்சித்ரகூடம் ஏ.வி.ரங்காச்சாரியாா், ‘திருவாய்மொழி நூற்றந்தாதி’ என்ற தலைப்பிலும் பேசினா்.

தொடா்ந்து மாலையில் திருச்சித்ரகூடம் ஹரிப்ரியா தேவனாதன், என்.வெங்கடேஷ் ஆகியோா் ஆா்த்தி பிரபந்தம், ஈட்டுரைப் பெருக்கா் ஆகிய தலைப்புகளில் பேசினா். சபா செயலா் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினாா். எழுத்தாளா் வளவ.துரையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com