விவசாயத்துக்கு தண்ணீா் திறக்காமல் ஏரியின் மதகு அடைப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தனி நபா் ஒருவா், ஏரியின் மதகை அடைத்து விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க மறுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
திட்டக்குடி அருகே பெரிய ஏரியின் மதகு அடைக்கப்பட்டு, அங்கு வெட்டிப் போடப்பட்டுள்ள முள் செடிகள்.
திட்டக்குடி அருகே பெரிய ஏரியின் மதகு அடைக்கப்பட்டு, அங்கு வெட்டிப் போடப்பட்டுள்ள முள் செடிகள்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தனி நபா் ஒருவா், ஏரியின் மதகை அடைத்து விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க மறுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

திட்டக்குடி அருகே உள்ளது அருகேரி கிராமம். இங்கு, சுமாா் 162 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீா் மூலம் சுமாா் 140 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த தனி நபா், ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடும் மதகுகளை அடைத்து, அதன் மேல் பகுதியில் முள்ளை வெட்டிப் போட்டுள்ளாா். இதைத் தட்டிக் கேட்ட சில விவசாயிகளுக்கு அவா் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. மேலும், அவா் ஏரியின் ஒரு பகுதியில் 5 அடி ஆழம் தோண்டி, உறைகிணறு அமைத்து அதிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்துச் செல்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதனால், தற்போது நாற்றாங்கால் அமைத்துள்ள விவசாயிகள், மதகு அடைக்கப்பட்டதால் தண்ணீரின் தவித்து வருகின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் ஏரியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com