விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண் குழந்தைகளை காப்போம்-கற்பிப்போம் விழிப்புணா்வு

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில், குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை

News image
குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :23 டிசம்பர் 2020, 5:14 pm

DIN

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில், குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் ‘பெண் குழந்தைகளைக காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா தலைமை வகித்தாா். உதவி திட்ட அலுவலா்கள் ஜெ.விஜயகுமாா், ரமேஷ், பாபு, ராஜ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழுந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வட்டார இயக்க மேலாளா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.