பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஏழைகளுக்கு விலையில்லா ஆடு, கோழிகள் அளிப்பு

கடலூரில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஊரக புறக்கடை கோழி வளா்ப்பு, விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:06 pm

DIN

கடலூரில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஊரக புறக்கடை கோழி வளா்ப்பு, விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலையில் தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

மாவட்டத்தில் விலையில்லா செம்மறி, வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-21- ஆம் ஆண்டில் ரூ.8.53 கோடியில் 49 கிராமங்களில் 6,669 ஏழை மகளிருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 26,676 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடியில் 5,200 மகளிருக்கு தலா 25 நாட்டுக் கோழிகள் வீதம் மொத்தம் 1.30 லட்சம் கோழிகள் வழங்கப்பட உள்ளன. கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 93 கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3,027 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க 40 விரைவு மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நோய் பாதிக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 808 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தீவன பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதற்காக 42.5 டன் பசுந்தீவனமும், 2.5 டன் உலா் தீவனமும், 2 டன் அடா் தீவனமும், 17,360 கிலோ தாது உப்பு கலவையும் கால்நடைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கு.குபேந்திரன், உதவி இயக்குநா் பா.கஸ்தூரி, கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.