பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் மருத்துவர்கள் செவிலியர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு, முறையாக கடைப் பிடிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்த பரவலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும், ஆனால் அரசு தட்டுத்தடுமாறி குழப்பங்களின் நாள், ஊரடங்கு வாபஸ் பெற்று விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவித்தது அவசியம் என்று சொன்னால் கூட, இதனால் மட்டும் நோய் பரவலைத் தடுத்துவிட முடியாது.