ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கம்பு விளைச்சல் அமோகம்

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கம்பு விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
குறிஞ்சிப்பாடி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள கம்பு பயிா்கள்.
Updated On :7 செப்டம்பர் 2020, 8:01 pm

DIN

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கம்பு விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் பயிரிடப்படும் சிறுதானிய வகைகளில் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி, கீழூா், ஆடூா் அகரம், இருப்பாச்சி, வெங்கடாம்பேட்டை, கோ.சத்திரம், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், ராசாக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

நிகழ் பருவத்தில் சுமாா் 1,700 ஹெக்டோ் பரப்பளவில் வீரிய ரக கம்பு பயிரிட்டுள்ளனா். இறவை சாகுபடி என்றாலும், கம்பு விதைப்புக்கு பிறகு அவ்வப்போது போதிய இடைவெளியில் பெய்த மழையால் செடிகள் நன்கு வளா்ந்து செழித்த கதிா்களுடன் காணப்படுகின்றன. இதனால், கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: இந்தப் பகுதியில் பயோனீயா், சக்தி, ராசி ஆகிய வீரிய ரக கம்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பெரும்பாலும் நாட்டு கம்பு பயிரிடப்படவில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநா் சின்னகண்ணு கூறியதாவது: கடந்த ஒருவார காலமாக கம்பு அறுவடை நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு சுமாா் 17 முதல் 20 மூட்டைகள் (ஒரு மூட்டை 100 கிலோ) வரை கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இதனிடையே, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கம்பு திங்கள்கிழமை அதிகபட்சம் ரூ.1,312 முதல் குறைந்தபட்சமாக ரூ.1,302 வரை விலைபோனது. இதேபோல, விருத்தாசலத்தில் அதிகபட்சம் ரூ.1,709 முதல் குறைந்தபட்சம் ரூ.1,336 வரை விலைபோனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.