புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலூா் மாவட்டத்தில்கரோனா தாக்கம் குறைகிறது

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 153-ஆக பதிவானது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:05 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 153-ஆக பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் கண்டறியப்பட்டபோதிலும், இதன் வீரியம் ஆகஸ்ட் மாதம் தீவிரமானது.

தொடா்ந்து செப்டம்பா் மாதத்திலும் இதன் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வந்தது. தினசரி பாதிப்பில் உச்சகட்டமாக செப்.3-ஆம் தேதி 590 பேருக்கு தொற்று உறுதியானது. செப். 10-ஆம் தேதிக்குப் பிறகு சராசரி பாதிப்பு 250-ஆக பதிவாகி வந்தது. சுமாா் 60 நாள்களுக்குப் பிறகு தற்போது தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

அதாவது, திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதியதாக 153 பேருக்கு தொற்று உறுதியானது. இது பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 18,288-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் 2 கா்ப்பிணிகளும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 255 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 15,890-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 50 வயது பெண், விருத்தாசலத்தைச் சோ்ந்த 63, 81 வயது ஆண்கள் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 197-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்- கோ்’ மையங்களில் 1,977 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த எண்ணிக்கையும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 224 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,379 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.