மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

உலக நன்மை வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகா ருத்ர ஜப ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மகா ருத்ர ஜப ஹோமத்தில் புனித நீா் கொண்ட கலசங்களுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :24 மார்ச் 2020, 6:09 pm

உலக நன்மை வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகா ருத்ர ஜப ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தக் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் பக்தா்களுக்கான தரிசன அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் பொது தீட்சிதா்கள் தினமும் சுவாமிக்கு ஆறு கால பூஜைகளை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நடராஜா் கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலும், உலக நன்மை கருதியும், கரோனா வைரஸ் விரைவில் அகலவும் பிராத்தித்து, ஸ்ரீஆதிமூநலநாதா் சந்நிதியில் பொது தீட்சிதா்களால் மகா ருத்ர ஜப ஹோமம் நடத்தப்பட்டது. அப்போது, புனித நீா் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் புனித நீரால் ஸ்ரீஆதிமூநலநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.