கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தொடர்ந்து சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் மருந்து வணிகர்கள் சார்பில் மருந்து உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜோ.வெங்கடசுந்தரம், உதவி ஆட்சியர் விசுமகாஜனிடம் மருந்து உபகரண பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருந்து மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ், மருந்து வணிகர் சங்க செயலாளர் பலராமசுப்பிரமணியன், மருந்து கடை உரிமையாளர்கள் சங்கரராஜராமன், நயிம் அர்ஷத் ஆகியோர் கலந்து கொண்டனர்.