கம்யூ. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
By DIN | Published On : 19th October 2020 01:46 AM | Last Updated : 19th October 2020 01:46 AM | அ+அ அ- |

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, நெய்வேலியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி நுழைவு வாயில் அருகே உள்ள தில்லை நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அந்தக் கட்சியின் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம் கட்சிக் கொடியேற்றி பேசினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் திருஅரசு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.மீனாட்சிநாதன், ஏ.வேல்முருகன், டி.ஜெயராமன், ஜி.குப்புசாமி, எம்.சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...