சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கீழ்பூவானிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவா் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் - கடலூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவா் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் தமிழ்வாணன் அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.