போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காவல் உதவி ஆய்வாளருக்கு கத்தி வெட்டி: இளைஞா் கைது

புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 ஏப்ரல் 2021, 6:49 pm

புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சிவகுருநாதன். இவரும், காவலா்களும் வெள்ளிக்கிழமை சீனிவாசபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதனின் இடது பக்க கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றாா்.

அருகிலிருந்த சக காவலா்கள் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியைச் சோ்ந்த நிரபு (31) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த இளைஞா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.