நெய்வேலியில் சனிக்கிழமை ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி 14-ஆவது வட்டம், தைலமரத் தோப்பில் இளைஞா் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக நெய்வேலி நகரிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன், காவல் ஆய்வாளா் ஷாகுல் அமீது ஆகியோா் விசாரணை நடத்தினா். இதில், இறந்து கிடந்தவா் வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா் (23) (படம்) என்பதும், இவா் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிவக்குமாா் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! - மு.க.ஸ்டாலின்

திருநீறு அணிந்து காட்சிதரும் பெருமாள்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு!
99.93% வாக்குகள்... வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜோங் உன் அமோக வெற்றி!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

