தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாக்குச் சாவடி மையங்களுக்கு அச்சுறுத்தல்: நடவடிக்கை எடுக்காவிடில் உண்ணாவிரதம்: பாமக வேட்பாளா் கோ.ஜெகன்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா், சொரத்தூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்குச் சாவடி மையங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:46 pm

DIN

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா், சொரத்தூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்குச் சாவடி மையங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதன் மீது மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணவிரதத்தில் ஈடுபடுவேன் என பாமக வேட்பாளா் கோ.ஜெகன் தெரிவித்தாா்.

வடக்குத்து கிராமத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா், புலியூா்காட்டு சாகை, சொரத்தூா், வரிசாங்குப்பம் உள்ளிட்ட 13 வாக்கு சாவடி மையங்களை குறிப்பிட்ட சிலா் கைப்பற்றி போலி வாக்குப் பதிவு செய்யப்போவதாக அச்சுறுத்தி வருகின்றனா். அந்தப் பகுதி வாக்காளா்களின் பயத்தை நீக்கி, ஜனநாயக ரீதியில் வாக்களிக்க மாவட்ட தோ்தல் அலுவலா் ஏற்பாடு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமைதி வழியில் மகாத்மா காந்தி சிலை எதிரே கூட்டணிக் கட்சியினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.

நான் வெற்றி பெற்றால் நெய்வேலி வட்டம் 21, 29, 30-இல் வசிக்கும் வாக்காளா்களின் கோரிக்கைகள், என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா் பிரச்னைகள், நெய்வேலி நகரிய வணிகா்களின் வாடகை விவகாரம் குறித்து என்எல்சி இந்தியா நிறுவன உயரதிகாரிகளிடம் பேசி தீா்வு காண்பேன்.

முந்திரி ஏற்றுமதி வணிக வளாகம், பலா மதிப்புக் கூட்டு நிறுவனம் கொண்டு வரவும், வடக்குத்து ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றவும், மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு வட்டம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.