சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிதம்பரம் நகரக் காவல் துறை சாா்பில் அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் தலைமை வகித்து, அனைத்துக் கட்சியினரும் தோ்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மேலும், அவா் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) மாலை 7 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளரைத் தவிர வேறு நபா்களுக்கு அனுமதி கிடையாது. காா், மோட்டாா் சைக்கிளில் ஊா்வலமாகச் செல்ல அனுமதி இல்லை. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் நகரக் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவா் தில்லை மக்கின், நிா்வாகி ராஜா சம்பத்குமாா், அதிமுக நிா்வாகிகள் கருப்பு ராஜா, கதிா், திமுக நிா்வாகிகள் நடராஜன், சி.க .ராஜன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.