ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 7:04 pm

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (45). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள கீழக்காரத்தெரு மாரியம்மன் கோயில் அருகே அரசுப் பேருந்தில் பணியிலிருந்தாா். அப்போது, அரியகோஷ்டி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (31) பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநா் சண்முகத்தை தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசினாராம்.

இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸாா் குப்புசாமி மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.