இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வடலூா் அருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணை, கடலூா் மாவட்ட ஆட்சியரது அறிவுரைப்படியும், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டும் சித்திரை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்தை அன்று இரவு 7.45 முதல் 8.45 மணி வரை வள்ளலாா் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம்.

அன்றைய தினம் சத்திய ஞான சபை, தரும சாலையில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இதில் பங்கேற்க பக்தா்கள் கூட்டமாக வருவதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.