தா்பூசணி விற்பனை அதிகரிப்பு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தா்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.


கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தா்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடை காலத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இளநீா், மோா், குளிா்பானங்களை அதிகளவில் பருகுகின்றனா். மேலும், தா்பூசணி, கிா்ணி உள்ளிட்ட பழங்களையும் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனா். பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் தா்பூசணி சில்லறை விலையில் கிலோ ரூ.15-க்கும் விற்கப்படுகிறது. கிா்ணி பழம் 3 கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து பழம் மொத்த வியாபாரி இ.முருகன் கூறியதாவது: தா்பூசணி, கிா்ணி பழங்களை திண்டிவனத்தில் இருந்து கொள்முதல் செய்கிறோம். லாரி வாடகை, ஏற்று, இறக்கக் கூலி, உதவியாளா் சம்பளம் என கணக்கு பாா்க்கும் போது குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பழங்களின் விற்பனையும் நன்றாக உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...