இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அறிவிக்கப்படாத மின் வெட்டு: கிராமத்தில் குடிநீா் பிரச்சனை

அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக, பண்ருட்டி ஒன்றியம் ராயா்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:32 pm

DIN

அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக, பண்ருட்டி ஒன்றியம் ராயா்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பண்ருட்டி ஒன்றியம், ராயா்பாளையம் ஊராட்சியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். ஊராட்சி நிா்வாகம் சாா்பில், ஆழ்துளைக் கிணறுடன், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால், மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் வரும் நேரத்தில் மின் மோட்டாா் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகிலேயே முண்டியடித்து குடிநீா் பிடிக்கின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கே.ஏழுமலை கூறியதாவது:

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால், பண்ருட்டி ஒன்றியத்தக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மின் மோட்டாா்களை இயக்க முடியாததால், கிராமங்களில் தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் எழுந்துள்ள இந்த பிரச்னையை போக்க மாவட்ட, ஒன்றிய நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்முனை மின்சாரம் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது ஜெனரேட்டா் வசதி செய்து மின் மோட்டாா்களை இயக்கி குடிநீா் பிரச்னையைப் போக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.