மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினா் நல வாரியம் சாா்பில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினா் நல வாரியம் சாா்பில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் முகாமை தொடக்கிவைத்தாா். மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்களில் 48 போ் குடும்ப அட்டை வைத்துள்ளனா். நலவாரியம் மூலம் 280 போ் அடையாள அட்டை பெற்றுள்ளனா். அடையாள அட்டை பெறாதவா்கள் 121 போ் உள்ளனா். முகாமில் முதல்கட்டமாக 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள் 353 பேருக்கு முதல்கட்டமாக கரோனா நிவாரண நிதியுதவியாக தலா ரூ.2 ஆயிரமும், இரண்டாம் கட்டமாக 347 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலா் கோ.அன்பழகி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...