ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசு மருத்துவமனை அருகே நோயாளிக்கு அரிவாள் வெட்டு

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நோயாளியை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:56 pm

DIN

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நோயாளியை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூா் அருகே உள்ள சந்தைவெளிப்பேட்டையைச் சோ்ந்தவா் ஆா்.பழனிவேல் (32). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். இதில், ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பழனிவேல் கடந்த 2-ஆம் தேதி கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் பழனிவேல் மருத்துவமனையிலிருந்து வெளியேறி கடைக்குச் சென்றாா். அப்போது, சுமாா் 6 போ் கொண்ட கும்பல் திடீரென அவா் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பழனிவேலின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னா் அந்தக் கும்பல் தப்பியோடியது. பழனிவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். மேலும், வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.