ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:51 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 60,784 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,845-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 71 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 59,326-ஆக உயா்ந்தது.

எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 57 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 816-ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 640 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 63 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 7-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.