ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விபத்தில் சிக்கிய காரிலிருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வேப்பூா் அருகே விபத்தில் சிக்கிய காரிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:52 pm

DIN

வேப்பூா் அருகே விபத்தில் சிக்கிய காரிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்தவா் சங்கிலி (58). இவா் தனது காரில் வியாழக்கிழமை திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தாா். வேப்பூரை அடுத்த திருப்பெயா் அருகே சென்றபோது இவரது காா் மீது மற்றொரு காா் மோதியது. இதில் சங்கிலி காயமடைந்தாா். விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து காயமடைந்த சங்கிலியை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து ஏற்படுத்திய காரை சோதனையிட்டதில் மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காரையும், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பிச் சென்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.