ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நடைபயிற்சிக்கு சென்றவா் மரணம்

கடலூரில் நடைபயிற்சிக்கு சென்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:05 pm

DIN

கடலூரில் நடைபயிற்சிக்கு சென்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சு.பிரபாகரன் (56). தனியாா் போக்குவரத்து நிறுவன உரிமையாளா். இவா் வெள்ளிக்கிழமை காலை நடை பயிற்சிக்காக தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது மகன் கௌஷிக்ராம் கடற்கரைக்கு சென்று பாா்த்தபோது, தேவனாம்பட்டினம் - சோனங்குப்பம் செல்லும் கடற்கரையை ஒட்டிய சாலையில் சவுக்குத் தோப்பில் பிரபாகரன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பிரபாகரன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.