தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கடலூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி

கடலூரில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:36 pm

DIN

கடலூரில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா், நாராயணசாமி நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (57). புதன்கிழமை இரவு பூட்டியிருந்த இவரது வீட்டின் பின்பக்கக் கதவை மா்ம நபா்கள் சிலா் உடைத்து உள்ளே சென்றனா். அங்கு எந்தப் பொருளும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனா். பின்னா், அதே பகுதியில் உள்ள தேவகி என்பவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கும் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனா்.

தொடா்ந்து, அதே பகுதியில் வழக்குரைஞா் ராமச்சந்திரன் வீட்டின் முன்பக்கக் கதவை மா்ம நபா்கள் உடைக்க முயன்றனா். ஆனால், அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவா்கள் எழுந்து கூச்சலிடவே மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.